மதுராந்தகம்: இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த, தொகுதியில் தொழிற்பேட்டை அமைத்து தரப்படும் என மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா உறுதியளித்தார். மதுராந்தகம் (தனி) தொகுதி மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி வெங்கடேசபுரம், மேட்டு கிராமம், வஜ்ராபுரம், ராவத்தநல்லூர், பஜார்பகுதி, மாடவீதி, காந்திநகர், ஓம் சக்தி நகர், கஸ்தூரி நகர், பழத்தோட்டம், மலை நகர் உள்பட பல பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, திமுக உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், அவருக்கு மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து, மலர் தூவி வரவேற்பளித்தனர். பின்னர், வேட்பாளர் மல்லை சத்யா பேசியதாவது.தமிழகத்தில் மோடி கொண்டுவரும் குடியுரிமை சட்டம் உள்பட அனைத்து சட்டங்களுக்கும் சிறந்த சட்டங்கள் என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். ஆகையால் தான் இந்த பகுதியில் நிற்கும் அதிமுக வேட்பாளரை, பாஜ வேட்பாளராக தொகுதி மக்கள் பார்க்கின்றனர். இந்த தொகுதியில் அரசு கல்லூரி கொண்டு வரப்படும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த தொழிற்பேட்டை அமைக்கப்படும். இதனால், இந்த தொகுதியில் பொருளாதாரம் மேம்படும், குடிநீர், சாலை வசதி, வீட்டுமனை பட்டா, கூரை வீட்டில் வசிக்கும் பொதுமக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.விவசாயிகளிடம் பிச்சை பாத்திரம் கொடுத்த எடப்பாடி ஆட்சியை அவர்கள் வீட்டுக்கு அனுப்புவது உறுதியாகியுள்ளது. ஆகையால், வரும் 6ம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலில், மதுராந்தகம் தொகுதியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் முதல் சின்னமாக உதயசூரியன் சின்னம் உள்ளது. இந்த சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை அளித்து என்னை வெற்றிபெற செய்யவேண்டும் என்றார். இதில், அச்சிறுப்பாக்கம் திமுக பேரூர் செயலாளர் உசேன், ஒன்றிய செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் கோகுலக்கண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எழிலரசன், ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் சிவக்குமார், ஒன்றிய துணை செயலாளர்கள் ரத்தினவேலு, பேக்கரி ரமேஷ், பேரூர் நிர்வாகிகள் சையத்முகமது, ஏழுமலை, சித்தார்த்தர், பட்டாபி, சிவசங்கரன், ஆனந்தகண்ணன், கஜேந்திரன், கபாலி, மோகனகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் எஸ்.எம்.ஷாஜஹான், ஒன்றிய தலைவர் எஸ்.ஜே.ரசூல், நகர தலைவர் சையத்அலி, நகர செயலாளர் இப்ராஹிம், தமுமுக நகர செயலாளர் அக்பர், நகர பொருளாளர் சலாவுதீன், காஞ்சி மாவட்ட மதிமுக செயலாளர் வளையாபதி, பொருளாளர் சங்கரன், தொகுதி பொறுப்பாளர் ராமலிங்கம், ஒன்றிய செயலாளர் கோட்டையன், அச்சிறுப்பாக்கம் பேரூர் செயலாளர் முஜிபுர்ரகுமான், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் வேலவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். …
The post தொழிற்பேட்டை அமைத்து தரப்படும்: மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா உறுதி appeared first on Dinakaran.